கமாடிட்டி சந்தைக்குள் நுழைவது எப்படி? அதற்கான அடிப்படை செயல் முறைகளை விளக்கவும்.
Question :
கமாடிட்டி சந்தைக்குள் நுழைவது எப்படி? அதற்கான அடிப்படை செயல் முறைகளை விளக்கவும்.
க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட், ரூபிடெஸ்க் கன்சல்டன்சி.
Answer:
“கமாடிட்டி வணிகம் என்பது பங்கு வணிகத்தில் ஃப்யூச்சர்ஸ் டிரேடிங் முறையில் வர்த்தகமாவதை போன்றது. கமாடிட்டி சந்தையில் 200-க்கும் அதிகமான பொருட்கள் வர்த்தகம் ஆகின்றன. நாம் அதிகம் பயன்படுத்தும் பல பொருட்கள் வணிகத்தில் உள்ளன.
கமாடிட்டி சந்தையில் முக்கியமாக உலோகங்கள், எரிசக்தி, வேளாண் சம்பந்தப்பட்ட பொருட்கள் வர்த்தகம் ஆகின்றன. இவற்றின் வரத்து மற்றும் உற்பத்தி போன்ற பல்வேறு விஷயங் களால் உடனுக்குடன் அதிகப்படியான ஏற்றமும் இறக்கமும் ஏற்படும். எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் கமாடிட்டி வர்த்தகத்தில் ஈடுபடுவது அவசியம்.
எம்சிஎக்ஸ் சந்தையில் உறுப்பினராக இருக்கும் ஒரு புரோக்கரிடம் கமாடிட்டி அக்கவுன்ட்டை முதலில் தொடங்கிக் கொள்ளவுங்கள். பங்கு வணிகத்தில் டீமேட் கணக்கைத் தொடங்குவது போன்றே இதற்கும் பான் கார்டு, வீட்டு முகவரிச் சான்று, வங்கிக் கணக்கு சான்று தேவை.
இதில் நாம் பங்குச் சந்தையில் ஃப்யூச்சர்ஸ் வணிகத்தில் எப்படி வணிகம் செய்கிறோமோ, அதேபோல மார்ஜின் தொகையை மட்டும் செலுத்தி கமாடிட்டிச் சந்தையில் வணிகமாகும் எந்த ஒருபொருளையும் நாம் வணிகம் செய்யலாம். அதேபோல, எந்த மாத கான்ட்ராக்ட்டின் அடிப்படையில் பொருள் தேவையோ, அதைத் தேர்வு செய்து அந்த மாதம் முடிவு தினம் வரை வைத்துக்கொள்ளலாம்.
தங்கம் மற்றும் வெள்ளி போன்ற குறிப்பிட்ட சில கமாடிட்டிகள் ஒப்பந்த முடிவு தேதிக்கு பின்னர் டெலிவரி எடுத்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. அதிக ஏற்ற இறக்கத்தினை தடுக்க கமாடிட்டி சந்தையிலும் சர்க்யூட் பில்ட்டர் உள்ளது.
கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, காப்பர் போன்ற சில முக்கியமான பொருட்கள் உலகச் சந்தையில் வணிக மாகும் விலையின் அடிப்படையில் இங்கு வணிகம் ஆகின்றன.”
கமாடிட்டி சந்தைக்குள் நுழைவது எப்படி? அதற்கான அடிப்படை செயல் முறைகளை விளக்கவும்.
க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட், ரூபிடெஸ்க் கன்சல்டன்சி.
Answer:
“கமாடிட்டி வணிகம் என்பது பங்கு வணிகத்தில் ஃப்யூச்சர்ஸ் டிரேடிங் முறையில் வர்த்தகமாவதை போன்றது. கமாடிட்டி சந்தையில் 200-க்கும் அதிகமான பொருட்கள் வர்த்தகம் ஆகின்றன. நாம் அதிகம் பயன்படுத்தும் பல பொருட்கள் வணிகத்தில் உள்ளன.
கமாடிட்டி சந்தையில் முக்கியமாக உலோகங்கள், எரிசக்தி, வேளாண் சம்பந்தப்பட்ட பொருட்கள் வர்த்தகம் ஆகின்றன. இவற்றின் வரத்து மற்றும் உற்பத்தி போன்ற பல்வேறு விஷயங் களால் உடனுக்குடன் அதிகப்படியான ஏற்றமும் இறக்கமும் ஏற்படும். எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் கமாடிட்டி வர்த்தகத்தில் ஈடுபடுவது அவசியம்.
எம்சிஎக்ஸ் சந்தையில் உறுப்பினராக இருக்கும் ஒரு புரோக்கரிடம் கமாடிட்டி அக்கவுன்ட்டை முதலில் தொடங்கிக் கொள்ளவுங்கள். பங்கு வணிகத்தில் டீமேட் கணக்கைத் தொடங்குவது போன்றே இதற்கும் பான் கார்டு, வீட்டு முகவரிச் சான்று, வங்கிக் கணக்கு சான்று தேவை.
இதில் நாம் பங்குச் சந்தையில் ஃப்யூச்சர்ஸ் வணிகத்தில் எப்படி வணிகம் செய்கிறோமோ, அதேபோல மார்ஜின் தொகையை மட்டும் செலுத்தி கமாடிட்டிச் சந்தையில் வணிகமாகும் எந்த ஒருபொருளையும் நாம் வணிகம் செய்யலாம். அதேபோல, எந்த மாத கான்ட்ராக்ட்டின் அடிப்படையில் பொருள் தேவையோ, அதைத் தேர்வு செய்து அந்த மாதம் முடிவு தினம் வரை வைத்துக்கொள்ளலாம்.
தங்கம் மற்றும் வெள்ளி போன்ற குறிப்பிட்ட சில கமாடிட்டிகள் ஒப்பந்த முடிவு தேதிக்கு பின்னர் டெலிவரி எடுத்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. அதிக ஏற்ற இறக்கத்தினை தடுக்க கமாடிட்டி சந்தையிலும் சர்க்யூட் பில்ட்டர் உள்ளது.
கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, காப்பர் போன்ற சில முக்கியமான பொருட்கள் உலகச் சந்தையில் வணிக மாகும் விலையின் அடிப்படையில் இங்கு வணிகம் ஆகின்றன.”
எம் சி எக்ஸ் சந்தையில் தங்கம் வாங்குவது எப்படி ? டெலிவரி எங்கு கிடைக்கும்?
Question :
எம் சி எக்ஸ் சந்தையில் தங்கம் வாங்குவது எப்படி ? டெலிவரி எங்கு கிடைக்கும்?
Answer :
க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.
எம் சி எக்ஸ் சந்தையில் தங்கம் வாங்குவதற்கு அதில் உறுப்பினராக உள்ள தரகரிடம் (Broker) நீங்கள் கமாடிட்டி டிரேடிங் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டும். கமாடிட்டி வர்த்தகமாகும் அனைத்து பொருட்களும் கான்ட்ராக்ட் அடிப்படையில் குறிப்பிட்ட மாதத்தின் குறிப்பிட்ட நாளில் காலாவதி (Expiry) ஆகிவிடும். நீங்கள் தங்கத்தை டெலிவரி எடுக்க விரும்பினால் உங்கள் தரகரே (Broker) அதற்கான நடைமுறைகளை மேற்கொள்வார்.
தங்கம் காலாவதியாகும் அந்த குறிப்பிட்ட தேதிக்குமுன் ஒன்றிலிருந்து ஆறு வர்த்தக நாட்கள், ஒப்பந்தம் (Tender) மற்றும் டெலிவரி பருவமாகும் (Delivery Period). இந்த காலத்தில் நீங்கள் ஒப்பந்தம் செய்து டெலிவரி எடுத்துக் கொள்ளலாம்.
தங்கம் டெலிவரி பற்றிய மேலும் சில குறிப்பிட்ட அம்சங்கள்....
· டெலிவரி மையம் - அஹமதாபாத்
· 995 சுத்தத்தன்மையுடைய பார் (Bar Gold) தங்கமாக கிடைக்கும்.
· தரச் சான்றிதழ் கிடைக்கும்
· தங்கம் டெலிவரி செய்வதினால் ஏற்படும் இதர செலவுகள் மற்றும் கூடுதல் வரிகள் (Tax) அனைத்தையும் செலுத்த நேரிடும்.
எம் சி எக்ஸ் சந்தையில் தங்கம் வாங்குவது எப்படி ? டெலிவரி எங்கு கிடைக்கும்?
Answer :
க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.
எம் சி எக்ஸ் சந்தையில் தங்கம் வாங்குவதற்கு அதில் உறுப்பினராக உள்ள தரகரிடம் (Broker) நீங்கள் கமாடிட்டி டிரேடிங் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டும். கமாடிட்டி வர்த்தகமாகும் அனைத்து பொருட்களும் கான்ட்ராக்ட் அடிப்படையில் குறிப்பிட்ட மாதத்தின் குறிப்பிட்ட நாளில் காலாவதி (Expiry) ஆகிவிடும். நீங்கள் தங்கத்தை டெலிவரி எடுக்க விரும்பினால் உங்கள் தரகரே (Broker) அதற்கான நடைமுறைகளை மேற்கொள்வார்.
தங்கம் காலாவதியாகும் அந்த குறிப்பிட்ட தேதிக்குமுன் ஒன்றிலிருந்து ஆறு வர்த்தக நாட்கள், ஒப்பந்தம் (Tender) மற்றும் டெலிவரி பருவமாகும் (Delivery Period). இந்த காலத்தில் நீங்கள் ஒப்பந்தம் செய்து டெலிவரி எடுத்துக் கொள்ளலாம்.
தங்கம் டெலிவரி பற்றிய மேலும் சில குறிப்பிட்ட அம்சங்கள்....
· டெலிவரி மையம் - அஹமதாபாத்
· 995 சுத்தத்தன்மையுடைய பார் (Bar Gold) தங்கமாக கிடைக்கும்.
· தரச் சான்றிதழ் கிடைக்கும்
· தங்கம் டெலிவரி செய்வதினால் ஏற்படும் இதர செலவுகள் மற்றும் கூடுதல் வரிகள் (Tax) அனைத்தையும் செலுத்த நேரிடும்.
என் டீமேட் கணக்கு ரத்தாகிவிடுமா?
Question :
நான் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக ஒரு ஆண்டுக்கு முன்பு டீமேட் கணக்கைத் தொடங்கினேன். சூழ்நிலை காரணமாக வர்த்தகத்தில் ஈடுபட முடியவில்லை. என் டீமேட் கணக்கு ரத்தாகிவிடுமா?
Answer :
க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.
ஒருவர் தனது டீமேட் கணக்கைத் தொடங்கி பல ஆண்டுகள் கழித்தும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாம், ரத்தாகாது. மேலும் எவ்வளவு டீமேட் கணக்கு வேண்டுமானாலும் பல்வேறு நிறுவனங்களில் துவக்கி வைத்துக் கொள்ளலாம். ஆனால் உங்கள் டீமேட் கணக்கை பராமரிக்கும் நிறுவனம் அதன் நிபந்தனைக்களுக்கு உட்பட்டு சில குறிப்பிட்ட காலத்திற்கேற்ப பராமரிப்பு செலவினை உங்களிடமிருந்து வசூலிக்க நேரிடலாம்.
நான் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக ஒரு ஆண்டுக்கு முன்பு டீமேட் கணக்கைத் தொடங்கினேன். சூழ்நிலை காரணமாக வர்த்தகத்தில் ஈடுபட முடியவில்லை. என் டீமேட் கணக்கு ரத்தாகிவிடுமா?
Answer :
க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.
ஒருவர் தனது டீமேட் கணக்கைத் தொடங்கி பல ஆண்டுகள் கழித்தும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாம், ரத்தாகாது. மேலும் எவ்வளவு டீமேட் கணக்கு வேண்டுமானாலும் பல்வேறு நிறுவனங்களில் துவக்கி வைத்துக் கொள்ளலாம். ஆனால் உங்கள் டீமேட் கணக்கை பராமரிக்கும் நிறுவனம் அதன் நிபந்தனைக்களுக்கு உட்பட்டு சில குறிப்பிட்ட காலத்திற்கேற்ப பராமரிப்பு செலவினை உங்களிடமிருந்து வசூலிக்க நேரிடலாம்.
போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் - க.கார்த்திக் ராஜா Via Nanayam Vikatan 26.06.2015
Ref : Nanayam Vikatan Tamil Magazine Dated 26.06.2015
Question :
ஒரு நிறுவனப்பங்குக்கு போனஸ் பங்கு அறிவிக்கப்படுகிறது என்றால் .அந்த போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்
Answer :
போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்
க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.
போனஸ் பங்குகள் என்பது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு, லாபத்தில் இயங்கி சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் தங்கள்லாபத்தை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில்தற்போதைய பங்குதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பங்குகளாகும். இவை 1:1, 1:2 போன்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக முடிவு செய்தால், அந்த நிறுவனத்தின் 1 பங்கை வைத்திருக்கும் பங்குதாரருக்கு இலவசமாக மேலும் 1 பங்கு கிடைக்கும். இந்த நடைமுறைக்கு ப்பின் 1 பங்கு வைத்திருக்கும் பங்குதாரர் 2 பங்குகளுக்கு சொந்தக்காரராகி விடுகிறார்.
மேலும் ஒரு நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்கும் போது அந்நிறுவனத்தின் பங்குவிலை குறைகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்கிற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவதாக வைத்துக் கொள்வோம். போனஸ் பங்குகள் வழங்குவதற்கு முன்னர் அந்த நிறுவனத்தின் பங்குவிலை ரூ.2000 ஆக இருந்தால், போனஸ் பங்குகள் வழங்கப்பட்ட பிறகு அதன் விலை தானாகவே ரூ.1000 ஆகிவிடும்.
இதுபோன்ற சூழலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்ரெக்கார்ட் தேதி என்பதைத்தான்! அதாவது நிறுவனங்கள் இதுபோன்றபோனஸ் பங்குகளையோ (Bonus Shares), டிவிடெண்டையோ (Dividend),பங்கு பிரிப்பையோ (Stock Split) அறிவிக்கும்போது ரெக்கார்ட் தேதி ஒன்றைஅறிவிப்பார்கள். அந்த குறிப்பிட்ட தேதியில் யாரிடம் பங்கு இருக்கிறதோஅவருக்குத்தான் அந்தச் சலுகை கிடைக்கும்.
உதாரணமாக. ஒரு நிறுவனம் ஜூன் 22ம் தேதியை ரெக்கார்ட் தேதியாகஅறிவித்திருந்தால். அன்றைய தினம் நம்முடைய டீமேட் கணக்கில் பங்குஇருக்க வேண்டும், குறைந்தபட்சம் அதற்கு இரண்டு தினங்களுக்குமுன்பாக நாம் அந்தப் பங்குகளை வாங்கியிருக்க வேண்டும். ஏனென்றால்,ஒரு பங்கை வாங்கினால் அது நம் டீமேட் கணக்குக்கு வர 2 நாட்கள்தேவைப்படும்.
அப்படிப் பார்த்தால் ஜூன் 20 ஆம் தேதியன்று வாங்கியவர்களுக்குத்தான்இந்தச் சலுகை கிடைக்கும். அதற்குப் பிறகு இந்தப் பங்கை வாங்கினால்அந்த பங்கு நமக்குக் கிடைக்குமே தவிர போனஸ் பங்குகள் கிடைக்காது. ரெக்கார்ட் தேதிக்கு முந்தய நாள் ஜூன் 21 Ex-Bonus தேதி என்று அழைக்கப்படும். Ex-Bonus தேதி குறிப்பிட்ட அந்த நாளில் அதன் பங்கின் விலை அந்த நிறுவனம் அறிவித்திருந்த விகிதத்தின் படி குறைந்து வர்த்தகமாகும்.
--
Question :
ஒரு நிறுவனப்பங்குக்கு போனஸ் பங்கு அறிவிக்கப்படுகிறது என்றால் .அந்த போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்
Answer :
போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்
க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.
போனஸ் பங்குகள் என்பது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு, லாபத்தில் இயங்கி சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் தங்கள்லாபத்தை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில்தற்போதைய பங்குதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பங்குகளாகும். இவை 1:1, 1:2 போன்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக முடிவு செய்தால், அந்த நிறுவனத்தின் 1 பங்கை வைத்திருக்கும் பங்குதாரருக்கு இலவசமாக மேலும் 1 பங்கு கிடைக்கும். இந்த நடைமுறைக்கு ப்பின் 1 பங்கு வைத்திருக்கும் பங்குதாரர் 2 பங்குகளுக்கு சொந்தக்காரராகி விடுகிறார்.
மேலும் ஒரு நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்கும் போது அந்நிறுவனத்தின் பங்குவிலை குறைகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்கிற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவதாக வைத்துக் கொள்வோம். போனஸ் பங்குகள் வழங்குவதற்கு முன்னர் அந்த நிறுவனத்தின் பங்குவிலை ரூ.2000 ஆக இருந்தால், போனஸ் பங்குகள் வழங்கப்பட்ட பிறகு அதன் விலை தானாகவே ரூ.1000 ஆகிவிடும்.
இதுபோன்ற சூழலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்ரெக்கார்ட் தேதி என்பதைத்தான்! அதாவது நிறுவனங்கள் இதுபோன்றபோனஸ் பங்குகளையோ (Bonus Shares), டிவிடெண்டையோ (Dividend),பங்கு பிரிப்பையோ (Stock Split) அறிவிக்கும்போது ரெக்கார்ட் தேதி ஒன்றைஅறிவிப்பார்கள். அந்த குறிப்பிட்ட தேதியில் யாரிடம் பங்கு இருக்கிறதோஅவருக்குத்தான் அந்தச் சலுகை கிடைக்கும்.
உதாரணமாக. ஒரு நிறுவனம் ஜூன் 22ம் தேதியை ரெக்கார்ட் தேதியாகஅறிவித்திருந்தால். அன்றைய தினம் நம்முடைய டீமேட் கணக்கில் பங்குஇருக்க வேண்டும், குறைந்தபட்சம் அதற்கு இரண்டு தினங்களுக்குமுன்பாக நாம் அந்தப் பங்குகளை வாங்கியிருக்க வேண்டும். ஏனென்றால்,ஒரு பங்கை வாங்கினால் அது நம் டீமேட் கணக்குக்கு வர 2 நாட்கள்தேவைப்படும்.
அப்படிப் பார்த்தால் ஜூன் 20 ஆம் தேதியன்று வாங்கியவர்களுக்குத்தான்இந்தச் சலுகை கிடைக்கும். அதற்குப் பிறகு இந்தப் பங்கை வாங்கினால்அந்த பங்கு நமக்குக் கிடைக்குமே தவிர போனஸ் பங்குகள் கிடைக்காது. ரெக்கார்ட் தேதிக்கு முந்தய நாள் ஜூன் 21 Ex-Bonus தேதி என்று அழைக்கப்படும். Ex-Bonus தேதி குறிப்பிட்ட அந்த நாளில் அதன் பங்கின் விலை அந்த நிறுவனம் அறிவித்திருந்த விகிதத்தின் படி குறைந்து வர்த்தகமாகும்.
--
பங்கு எவ்வளவு விலை இறங்கும் - க.கார்த்திக் ராஜா Via Nanayam Vikatan - Dated 05.06.2015
Ref : Nanayam Vikatan Tamil Magazine Dated 05.06.2015
Question :
ஒரு நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சந்தையின் எதிா்ப்பாா்ப்பை பூா்த்தி செய்யாதபோது, அந்த நிறுவனத்தின் பங்கு எவ்வளவு விலை இறங்கும் என்பதை எப்படி கண்டுப்படிப்பது?
Answer :
க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.
பொதுவாக ஒரு நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதன் பங்குகள் சுமார் ஒரு வார காலம் முன்னதாகவோ அல்லது முந்தைய நாளிலிருந்தோ ஏறத் தொடங்கிவிடும். இத்தகைய காலத்தில் அதன் தேவைப்பாடு (Demand) இயல்பு நிலையிலிருந்து சற்று அதிகமாக காணப்படும். அதற்கேற்ப அதன் விலையும் சிறிது சிறிதாக ஏறிக் கொண்டிருக்கும்.
காலாண்டு முடிவுகள் வெளியாகும் நாளன்று அதன் முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பை பூா்த்தி செய்யாதபோது தேவை மற்றும் விநியோக (Demand & Supply) அடிப்படையில் இறங்கத் தொடங்கிவிடும். இந்த இறக்கம் என்பது அந்த முடிவுகளின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். பெரும்பாலும் அதன் எதிர்பார்ப்புக்கேற்ப எவ்வளவு விலை ஏறியதோ அதே அளவுக்கு இறங்கவும் வாய்ப்புண்டு. ஒரு வேளை அந்த முடிவுகள் மிக மோசமானதாக இருந்தால் அதன் பாதிப்புத் தன்மைக்கேற்ப பங்கு விலை இன்னும் அதிகமாக கீழிறங்கும் நிலையும் ஏற்படலாம். ஆனால் இந்த விலைச்சரிவு நிலையானதல்ல மற்றும் திடீரென்று ஏற்படும் இந்த விலைச்சரிவை அளவீடு செய்ய துல்லியமான அளவுகோல்களும் கிடையாது.
நீண்டகால முதலீடு செய்பவர்கள் வெறும் காலண்டு முடிவுகளை மட்டும் வைத்து அந்த நிறுவனத்தின் எதிர்காலத்தை முடிவு செய்வது சரியாக இருக்காது. சுமார் 5 வருட காலத்தின் வருடாந்திர முடிவுகளை (Annual Result) வைத்து ஆராய்ந்த பின்னரே ஒரு நிறுவனத்தின் முழுமையான செயல்திறனை நம்மால் கணிக்க முடியும்.
Question :
ஒரு நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சந்தையின் எதிா்ப்பாா்ப்பை பூா்த்தி செய்யாதபோது, அந்த நிறுவனத்தின் பங்கு எவ்வளவு விலை இறங்கும் என்பதை எப்படி கண்டுப்படிப்பது?
Answer :
க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.
பொதுவாக ஒரு நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதன் பங்குகள் சுமார் ஒரு வார காலம் முன்னதாகவோ அல்லது முந்தைய நாளிலிருந்தோ ஏறத் தொடங்கிவிடும். இத்தகைய காலத்தில் அதன் தேவைப்பாடு (Demand) இயல்பு நிலையிலிருந்து சற்று அதிகமாக காணப்படும். அதற்கேற்ப அதன் விலையும் சிறிது சிறிதாக ஏறிக் கொண்டிருக்கும்.
காலாண்டு முடிவுகள் வெளியாகும் நாளன்று அதன் முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பை பூா்த்தி செய்யாதபோது தேவை மற்றும் விநியோக (Demand & Supply) அடிப்படையில் இறங்கத் தொடங்கிவிடும். இந்த இறக்கம் என்பது அந்த முடிவுகளின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். பெரும்பாலும் அதன் எதிர்பார்ப்புக்கேற்ப எவ்வளவு விலை ஏறியதோ அதே அளவுக்கு இறங்கவும் வாய்ப்புண்டு. ஒரு வேளை அந்த முடிவுகள் மிக மோசமானதாக இருந்தால் அதன் பாதிப்புத் தன்மைக்கேற்ப பங்கு விலை இன்னும் அதிகமாக கீழிறங்கும் நிலையும் ஏற்படலாம். ஆனால் இந்த விலைச்சரிவு நிலையானதல்ல மற்றும் திடீரென்று ஏற்படும் இந்த விலைச்சரிவை அளவீடு செய்ய துல்லியமான அளவுகோல்களும் கிடையாது.
நீண்டகால முதலீடு செய்பவர்கள் வெறும் காலண்டு முடிவுகளை மட்டும் வைத்து அந்த நிறுவனத்தின் எதிர்காலத்தை முடிவு செய்வது சரியாக இருக்காது. சுமார் 5 வருட காலத்தின் வருடாந்திர முடிவுகளை (Annual Result) வைத்து ஆராய்ந்த பின்னரே ஒரு நிறுவனத்தின் முழுமையான செயல்திறனை நம்மால் கணிக்க முடியும்.
புத்தக மதிப்பு (Book Value) - க.கார்த்திக் ராஜா Via Nanayam Vikatan Tamil Magazine Dated 22.05.2015
Ref : Nanayam Vikatan Tamil Magazine Dated 22.05.2015
Question :
பங்குச் சந்தையில் புக் வேல்யூ என்று சொல்லப்படும் புத்தக மதிப்பை ஒரு பங்கிற்கு எப்படி கணக்கிட வேண்டும்.பல வலைதளங்களில் பலவிதமாக கூறப்பட்டுள்ளது. எனவே தயவுசெய்து உதாரணத்தோடு விளக்கவும்.
Answer :
க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.
ஒரு நிறுவனத்தின் புத்தக மதிப்பு (Book Value) என்பது அதன் உண்மையான சொத்து மதிப்பைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.ஒரு நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பிலிருந்து அந்த நிறுவனம் வாங்கிய கடன்களைக் கழித்துக் காணப்படும் மதிப்பே அந்த நிறுவனத்தின் உண்மையான மதிப்பாகும்
உதாரணமாக, ஒரு நிறுவனம் 80 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களையும், 60 லட்சத்துக்கு கடனும் வைத்திருந்தால் அந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பு 20 லட்சம் (80 லட்சம் -- 60 லட்சம்) ஆகும். இதனாலேயே ஒரு நிறுவனம் கடனில் உள்ளதா அல்லது நல்ல நிலையில் உள்ளதா என்பதனை அறிவதற்கு தோரயமாக புத்தக மதிப்பை பயன்படுத்துகிறார்கள்.
நாம் புத்தக மதிப்பினை ஒரு நிறுவனத்தின் இருப்பு நிலைக்குறிப்பு (Balance Sheet) என்ற அறிக்கையினை ஆராய்ந்து அறியலாம்.புத்தக மதிப்பினை வைத்து அதன் பங்கு விலை நல்ல மதிப்புடன் உள்ளதா? இல்லையா? என்றும் அறிய முடியும். எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் மொத்தம் 20,000 பங்குகளையும், புத்தக மதிப்பு 20,00,000 ஆகவும் கொண்டிருப்பதாக கொள்வோம். இப்போது ஒவ்வொரு பங்கிற்கும் உண்மையான மதிப்பு என்ன என்பதை பின்வருமாறு கணக்கிடலாம்
Book Value per share = Book value / Total No. of outstanding shares.
ஒரு பங்கின் புத்தக மதிப்பு = புத்தக மதிப்பு / பங்குகள் எண்ணிக்கை
ஒரு பங்கின் புத்தக மதிப்பு = 20,00,000 / 20,000 = ரூ.100.
Book Value = Total Assets – (Intangible (Patents, Goodwill & etc.,) Assets + Liabilities)
Total No. of outstanding shares = Total No. of Equity Shares – Total No. of Preference shares
Question :
பங்குச் சந்தையில் புக் வேல்யூ என்று சொல்லப்படும் புத்தக மதிப்பை ஒரு பங்கிற்கு எப்படி கணக்கிட வேண்டும்.பல வலைதளங்களில் பலவிதமாக கூறப்பட்டுள்ளது. எனவே தயவுசெய்து உதாரணத்தோடு விளக்கவும்.
Answer :
க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.
ஒரு நிறுவனத்தின் புத்தக மதிப்பு (Book Value) என்பது அதன் உண்மையான சொத்து மதிப்பைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.ஒரு நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பிலிருந்து அந்த நிறுவனம் வாங்கிய கடன்களைக் கழித்துக் காணப்படும் மதிப்பே அந்த நிறுவனத்தின் உண்மையான மதிப்பாகும்
உதாரணமாக, ஒரு நிறுவனம் 80 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களையும், 60 லட்சத்துக்கு கடனும் வைத்திருந்தால் அந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பு 20 லட்சம் (80 லட்சம் -- 60 லட்சம்) ஆகும். இதனாலேயே ஒரு நிறுவனம் கடனில் உள்ளதா அல்லது நல்ல நிலையில் உள்ளதா என்பதனை அறிவதற்கு தோரயமாக புத்தக மதிப்பை பயன்படுத்துகிறார்கள்.
நாம் புத்தக மதிப்பினை ஒரு நிறுவனத்தின் இருப்பு நிலைக்குறிப்பு (Balance Sheet) என்ற அறிக்கையினை ஆராய்ந்து அறியலாம்.புத்தக மதிப்பினை வைத்து அதன் பங்கு விலை நல்ல மதிப்புடன் உள்ளதா? இல்லையா? என்றும் அறிய முடியும். எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் மொத்தம் 20,000 பங்குகளையும், புத்தக மதிப்பு 20,00,000 ஆகவும் கொண்டிருப்பதாக கொள்வோம். இப்போது ஒவ்வொரு பங்கிற்கும் உண்மையான மதிப்பு என்ன என்பதை பின்வருமாறு கணக்கிடலாம்
Book Value per share = Book value / Total No. of outstanding shares.
ஒரு பங்கின் புத்தக மதிப்பு = புத்தக மதிப்பு / பங்குகள் எண்ணிக்கை
ஒரு பங்கின் புத்தக மதிப்பு = 20,00,000 / 20,000 = ரூ.100.
Book Value = Total Assets – (Intangible (Patents, Goodwill & etc.,) Assets + Liabilities)
Total No. of outstanding shares = Total No. of Equity Shares – Total No. of Preference shares
Z’ தர நிறுவனங்கள் - க.கார்த்திக் ராஜா Via Nanayam Vikatan Tamil Magazine : 08.05.2015
Ref : Nanayam Vikatan Tamil Magazine Dated 08.05.2015
Question: விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் (shares of non-compliant companies)டிரேட் பார் டிரேட் என்கிற முறையில் இஸட் குரூப்பில் வர்த்தகமாகும் என்று நண்பன் சொன்னான்.இதை விளக்கிச் சொல்ல முடியுமா ?
க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.
Answer :
‘Z’ தர நிறுவனங்கள் என்பவை பங்கு சந்தையின் பட்டியலிடுவதற்கு தேவையான நடைமுறைகளை பின்பற்றாமலோ அல்லது முதலீட்டளர்களின் புகார்களை நிவர்த்தி செய்யாமலோ இருக்கின்ற நிறுவனங்களை குறிக்கும்.
மேலும் சி.டி.எஸ்.எல் (C.D.S.L) அல்லது என்.எஸ்.டி.எல் (N.S.D.L)--ல் பங்குகளை டிமேட் (Demat) செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய தவறிய நிறுவனங்களும் இதில் அடங்கும்.
இந்த வகை பங்குகள் பல்வேறு அடிப்படைகளில் ஒருவேளை அபாயகரமனதாகவும் இருக்கலாம்.
1. முதலாவதாக, பொதுமக்களிடையே இந்த நிறுவனங்களை பற்றிய போதுமான தகவல்கள் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் இவைகளை கண்காணிப்பது மிகவும் கடினம்.
2. இரண்டாவதாக, ஊடகங்களில் சேகரிக்கும் செய்திகள் குறைவாக இருப்பின் பொதுவான ஆய்வுகளில் இருந்து இவற்றைப் பற்றிய தகவல்கள் மறைக்கப் பட்டிருக்கும். இது இந்நிறுவனங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடிய இன்சைடர் டிரேடிங்கை (Insider Trading) செய்வதற்கான வாய்ப்பாக உருவாகிவிடும்.
3. மூன்றாவதாக இந்த நிறுவனங்கள் ஏற்கனவே முதலீட்டாளர் புகார்களை நிவர்த்தி செய்வதில் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளது.
இவ்வகையான பங்குகள் டிரேட் பார் டிரேட் என்கிற முறையில் ‘Z’ குரூப்பில் வர்த்தகமாகும்
'டிரேட் பார் டிரேட்' என்பது கட்டாய டெலிவரி முறையில் மட்டுமே வர்த்தகமாகும். அதாவது 'டிரேட் பார் டிரேட்' பங்குகளை தினசரி (Intraday) வர்த்தகம் செய்ய முடியாது
Question: விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் (shares of non-compliant companies)டிரேட் பார் டிரேட் என்கிற முறையில் இஸட் குரூப்பில் வர்த்தகமாகும் என்று நண்பன் சொன்னான்.இதை விளக்கிச் சொல்ல முடியுமா ?
க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.
Answer :
‘Z’ தர நிறுவனங்கள் என்பவை பங்கு சந்தையின் பட்டியலிடுவதற்கு தேவையான நடைமுறைகளை பின்பற்றாமலோ அல்லது முதலீட்டளர்களின் புகார்களை நிவர்த்தி செய்யாமலோ இருக்கின்ற நிறுவனங்களை குறிக்கும்.
மேலும் சி.டி.எஸ்.எல் (C.D.S.L) அல்லது என்.எஸ்.டி.எல் (N.S.D.L)--ல் பங்குகளை டிமேட் (Demat) செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய தவறிய நிறுவனங்களும் இதில் அடங்கும்.
இந்த வகை பங்குகள் பல்வேறு அடிப்படைகளில் ஒருவேளை அபாயகரமனதாகவும் இருக்கலாம்.
1. முதலாவதாக, பொதுமக்களிடையே இந்த நிறுவனங்களை பற்றிய போதுமான தகவல்கள் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் இவைகளை கண்காணிப்பது மிகவும் கடினம்.
2. இரண்டாவதாக, ஊடகங்களில் சேகரிக்கும் செய்திகள் குறைவாக இருப்பின் பொதுவான ஆய்வுகளில் இருந்து இவற்றைப் பற்றிய தகவல்கள் மறைக்கப் பட்டிருக்கும். இது இந்நிறுவனங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடிய இன்சைடர் டிரேடிங்கை (Insider Trading) செய்வதற்கான வாய்ப்பாக உருவாகிவிடும்.
3. மூன்றாவதாக இந்த நிறுவனங்கள் ஏற்கனவே முதலீட்டாளர் புகார்களை நிவர்த்தி செய்வதில் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளது.
இவ்வகையான பங்குகள் டிரேட் பார் டிரேட் என்கிற முறையில் ‘Z’ குரூப்பில் வர்த்தகமாகும்
'டிரேட் பார் டிரேட்' என்பது கட்டாய டெலிவரி முறையில் மட்டுமே வர்த்தகமாகும். அதாவது 'டிரேட் பார் டிரேட்' பங்குகளை தினசரி (Intraday) வர்த்தகம் செய்ய முடியாது
Subscribe to:
Posts (Atom)